Oplus_131072
ஒரு மனிதன் உயிரோடு இருக்கும்போது
அவனின் நல்ல குணங்கள் யாருக்கும் பெரிதாக தெரியாது…
அவன் சிரித்தது சாதாரணம்,
அவன் உதவியது இயல்பு,
அவன் நல்ல மனசு கவனிக்கப்படாத ஒன்று…
ஆனால்…
அவன் இல்லாத நாளில் தான்
அவன் மதிப்பு உயர ஆரம்பிக்கும்…
“அவன் நல்லவன்…”
“அவன் மாதிரி #மனிதன் கிடைக்க மாட்டான்…”
என்று பேசும் ஒவ்வொரு வார்த்தையும்
அவனின் இல்லாததைக் கொண்டாடும் நினைவுகள்…
ஒரு மனிதனின் நல்ல குணங்களையும் புகழைச் சொல்ல
அவன் மரணிக்க வேண்டியதாய் இருக்கிறது.
உயிரோடு இருக்கும்போதே
மனிதர்களை மதிக்க கற்றுக்கொள்ளுங்கள்…
இல்லையென்றால்,
நினைவுகளை மட்டுமே போற்ற வேண்டிய நிலை வரும்…!




