மஞ்சள் தானம் – மங்களம் உண்டாகும்.
அன்னதானம் – சகல பாக்கியங்களும் உண்டாகும்.
அரிசி தானம் – பாவங்கள் தொலையும்.
ஆடை தானம் – ஆயுள் விருத்தியாகும்.
எண்ணெய் தானம் – கர்ம வினைகள் அகலும். கடன்கள் குறையும்.
காய்கறிகள் தானம் – பித்ரு சாபங்கள் விலகும். குழந்தைகளின் ஆரோக்யம் வளரும்.
காலணி தானம் – பெரியோர்களை நிந்தித்த பாவம் விலகும்.
தீர்த்த யாத்திரை செய்த பலன் கிடைக்கும்.
குடை தானம் – தவறான வழியில் சேர்த்த செல்வத்தினால் ஏற்பட்ட பாவம் விலகும். குழந்தைகளுக்கு சிறப்பான எதிர்காலம் உண்டாகும்.
தேன் தானம் – புத்திர பாக்கியம் உண்டாக்கும். சுகம் தரும் இனிய குரல் வரும்.
நெய் தானம் – வீடுபேறு அடையலாம்.
தண்ணீர் தானம் – மனசாந்தி ஏற்படும்.
பால் தானம் –சவுபாக்கியம்.
பழவகைகள் தானம் – புத்ரபவுத்ர அபிவிருத்தி.
தயிர் தானம் – இந்திரிய விருத்தியாகும்.
வெள்ளி தானம் – பித்ருகள் ஆசிகிடைக்கும்.
பாய் தானம் – பெற்றவர்களை, பெரியவர்களை புறக்கணித்ததால் வந்த சாபங்கள் தீரும். கடும் நோய்களுக்கு நிவாரணம் கிட்டும். அமைதியான மரணம் ஏற்படும்.
தீப தானம் – கண் பார்வையை தீர்க்கமாக்கும்.
தேங்காய் தானம் – நினைத்த காரியம் வெற்றி அடையும்.




