கணவன் மனைவி உறவில் வரும் சண்டைக்கு தீர்வு என்ன..? படிச்சு தெரிஞ்சுக்கோங்க..!!

“”கணவன் மனைவி உறவில் வரும் சண்டைக்கு தீர்வு
மவுனம் மட்டும் தான்..

கணவன் சத்தம் உயரும் போது மனைவி மவுனமாகவும்
மனைவி சத்தம் உயரும் போது
கணவன் மவுனமாகவும்
இருந்துவிட்டால் சண்டை சத்தம் இல்லாமல் போய்விடும்…

இரண்டு பேருமே சத்தம் போட்டுக் கொண்டு இருந்தால் சண்டை பெரிதாகும் சத்தம் வீட்டுக்கு வெளியே போகும் மூன்றாவது நபர் உள்ள வருவார்கள் ….

சும்மா கிடந்த வாய்க்கு அவல் கிடைத்தது போல உங்களுடைய சண்டையை பெரிதாக்கி அவர்கள் குளிர் காய்வார்கள்…

யாரோ ஒருவர் மௌனம் காத்து விட்டால் மூன்றாவது நபர் வருபதற்க்கு இடமில்லை..

மூன்றாம் நபர் உள்ளே வந்து
எத்தனையோ குடும்பம் சீரழிந்து போயிருக்கு … நீங்களும் அறிவீர்கள்…

குடும்பம் என்பது ஒரு ரயில் போன்று
கணவனும் மனைவியும் தான் தண்டவாளம் ..

குழந்தைகள் என்னும் ரயில் விபத்து இல்லாமல் பயணிக்க வேண்டும் என்றால் தண்டவாளம் சரியாக இருக்க வேண்டும்.,. தண்டவாளம் சரியாக அமைந்து விட்டால் ரயில்கள் சுமூகமாக பயணிக்கும்….

தண்டவாளத்தில் விரிசல் காரணமாக எத்தனையோ ரயில்கள் விபத்துக்குள்ளாகி உள்ளது..

அந்த மாதிரி விபத்துக்கு நீங்க காரணமாக இருக்காதீர்கள்

கணவன் மனைவி உறவில் சண்டை சச்சரவு இல்லாமல் இருந்தால்
குழந்தைகள் சந்தோஷமாக இருப்பார்கள்..

Read Previous

ஒரு தந்தை தனது மகளின் திருமண விழாவில் சொன்ன வார்த்தைகள்..!! படித்ததில் பிடித்தது..!!

Read Next

கணவன் மனைவிக்கு இடையே இந்த புரிதல் மட்டும் இருந்தால் போதும் வாழ்க்கை சொர்க்கம் தான்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular