கணவன், மனைவி சண்டை.. ஆண், பெண் யோசிப்பது என்ன?.. படித்ததில் பிடித்தது..!!

🍁🌹🍁ஒரு சண்டையை முடிக்க ஆண் கையில் எடுக்கும் வாசகம்.
‘இப்ப உனக்கு என்ன பிரச்சினை’?

🍁🌹🍁அந்த சண்டையை முடிக்க விடாமல் பெண் பதில் அளிக்கும் வாசகம்.
‘எதுவும் பிரச்சினை இல்லை உங்க வேலையை பார்க்கலாம்’.

🍁🌹🍁ஒரு சண்டையை முடிக்க ஆண் கையில் எடுக்கும் வாசகம்.
‘சரி என் மேலே தான் தப்பு…
இனி செய்யலை மன்னிச்சிடு’.

🍁🌹🍁அந்த சண்டையை முடிக்க விடாமல் பெண் பதில் அளிக்கும் வாசகம்.
‘உங்களை மன்னிக்க நான் யார் ஸார்…
யாரோ தானே நான்’.

🍁🌹🍁ஒரு சண்டையை முடிக்க ஆண் கையில் எடுக்கும் வாசகம்.
‘சரி ஓகே நான் கிளம்பறேன்’.

🍁🌹🍁அந்த சண்டையை முடிக்க விடாமல் பெண் பதில் அளிக்கும் வாசகம்.
‘அதானே நான் எப்படி போனா உங்களுக்கென்ன?’

🍁🌹🍁ஒரு சண்டையை முடிக்க ஆண் கையில் எடுக்கும் வாசகம்.
‘இனி இந்த தப்பை இன்னொரு தடவை செஞ்சா செருப்பால் அடி’

🍁🌹🍁அந்த சண்டையை முடிக்க விடாமல் பெண் பதில் அளிக்கும் வாசகம்.
‘இதே தான் போன தடவையும் சொன்னீங்க…
அடிச்சிக்கிட்டீங்களா என்ன?’

🍁🌹🍁அவளாய் பார்த்து சமாதானமாகி, போனால் போகிறதென்று விட்டால் தான் உண்டு.
அதுவரை நீ சமாதானம் என்ற பெயரில் கொஞ்சியும் கெஞ்சியும் அங்கேயே தான் இருக்க வேண்டும்.

🍁🌹🍁எக்கேடாவது கெட்டு தொலை என்று விடவும் முடியாது,
இனியொரு முறை இப்படி நடக்காதென்று உறுதி மொழியும் கொடுக்க முடியாது.

🍁🌹🍁ஏனென்றால் இதற்கு முன் லட்ச தடவை அது நடந்திருக்கும்.

🍁🌹🍁அது நடந்த தேதி காலம் நிமிடம் வரை ஞாபகத்தில் வைத்துக்கொண்டு கேள்வியாலே துளைத்தெடுப்பாள்.

🍁🌹🍁ஒரு சண்டை சங்கிலி தொடர்‌போல ஒன்றன்பின் ஒன்றாக பின்னோக்கி நகரும்.

🍁🌹🍁அன்னிக்கு அது செஞ்சிங்களே,
அன்னிக்கு இப்படி சொன்னிங்களே,
கேக்கணும் நினைச்சேன்..
இப்பதான் ஞாபகத்துக்கு வந்ததுன்னு ஒண்ணு ஒண்ணா போகும்.

🍁🌹🍁இது எப்போது நடந்தது?
நான் சொன்னேனா?
முதலில் இது நடந்ததா என்று யோசித்து யோசித்து ஒன்று ஒன்றாக பதில் அளித்து வருவதற்குள்
ஏன்டா சண்டை போட்டோம்னு ஆயிடும் ஒவ்வொரு ஆண்களுக்கும்..
😔😔😔

ஆனாலும் விட மாட்டாங்க🙄🙄

படித்ததில் பிடித்தது 👍🏻

Read Previous

மூக்கிரட்டையில் மூக்கில் விரலை வைக்கும் மருத்துவ குணங்கள்..!! நீங்களும் தெரிஞ்சிக்கோங்க..!!

Read Next

வீட்டிற்கு வருபவர்களுக்கு குடிக்க தண்ணீர் கொடுப்பது ஏன் தெரியுமா..??

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular