ஏதாவது ஒரு நல்ல காரியம் தடைபட்டாலும் நேரம் சரியில்லை என்றாலும் ஜோதிடர்கள் மற்றும் ஆன்மீக ரீதியாக உள்ளவர்கள் இந்த பரிகாரம் பண்ணுங்க அந்த பரிகாரம் பண்ணுங்க என்று கூறுவார்கள். இந்நிலையில் நீங்கள் கேட்டது கிடைக்கும் கல் உப்பு பரிகாரம் எப்படி செய்ய வேண்டும் என்பதை பற்றி இந்த பதிவில் நாம் பார்க்கலாம்.
கல் உப்பு தீபம் ஏற்றி வழிபாடு செய்வதால் 48 நாட்களுக்குள் நீங்கள் நினைத்தது நடக்கும் என்பது நம்பிக்கை. தீபம் ஏற்றும் போது விளக்கில் நல்லெண்ணெய் ஊற்றி தீபத்தை கிழக்கு திசை பார்த்து ஏற்ற வேண்டும். பௌர்ணமி நாட்களில் உப்பு தீபம் ஏற்றினால் தொழில் தடை, வருமான தடை, பதிவு கிடைப்பதில் இருக்கும் தடைகள் நீங்கும். கல் உப்பு பரிகாரம்: கண்ணாடி பாத்திரத்தில் கல்லுப்பை நிரப்பி எலுமிச்சை நடுவில் வைத்து மிளகாயை அதை சுற்றி நான்கு மூலைகளிலும் வைத்து தலைவாசல் கதவின் உட்புறம் வைத்தால் வீட்டில் உள்ள தீய சக்திகள் அகலும்.




