‘காதல் நீ, காயம் நீ’.. வலிகள் நிறைந்த வரிகள்..!! படித்ததில் பிடித்த பதிவு..!!

இப்போதெல்லாம் உன் பெயர் வைத்த ஆட்களிடம் உணர்ச்சி வசப்படாமல் பேச முடிகிறது..

உன் பெயரை சொல்லி யாரோ யாரையோ அழைத்தால் திருப்பி பார்க்காமல் நடக்கிறேன் …

உன் முக ஜாடையில் யாரையேனும் காண நேர்ந்தாலும் மனம் அவர் பின்னே துள்ளி கொண்டு செல்வதில்லை …

நம் பழைய குறுஞ்செய்திகளை படித்து பார்ப்பதில்லை..

நீயாக தான் இருக்கும் என்று போன் ரிங்டோனுக்கும், மெசேஜ் நோடிபிகேஷனுக்கும் விழுந்தடித்து ஓடுவதில்லை..

கதறி அழ தோன்றும் நேரங்களில் உன் தோள்களை தேடுவதில்லை …

ஆம் நீ இன்றி வாழ பழகி கொண்டேன் இப்போதெல்லாம்…

எல்லாம் இயல்பாக இருப்பது போல தான் இருக்கிறது …

ஆனாலும் “ஏன் எப்பவும் எதையோ பறி கொடுத்த மாதிரியே இருக்க” என்ற பிறரின் கேள்விக்கு தான் பதில் தெரியவே இல்லை…

#காதல்_நீ..
#காயம்_நீ..

Read Previous

வெறும் வயிற்றில் வல்லாரை சாப்பிட்டால் என்ன ஆகும் தெரியுமா?.. கட்டாயம் தெரிஞ்சுக்கோங்க..!!

Read Next

மகளின் பள்ளி கட்டணத்தை திருப்பி கேட்ட தந்தை மீது தாக்கு..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular