காலையில் பழைய சோறு சாப்பிட்டால்…..
காலையில் பழைய சோறு சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் என்னென்ன என்பதை பற்றி தான் நாம் இந்த பதிவில் பார்க்க போகிறோம். நம் முன்னோர்களின் காலகட்டத்தில் எல்லாம் பழைய சோறு என்பது ஒருவகை உணவாகவே இருந்தது. ஆனால் இந்த காலகட்டத்திலோ பீட்சா பர்கர் என உணவு முறை மாறி உடலும் பலவிதமான நோய்களுக்கு தள்ளப்படுகிறது. இந்நிலையில் பழையசோறு காலையில் சாப்பிடுவதால் என்ன பலன் என்பதை தற்போது பார்க்கலாம்.
காலையில் பழைய சோறு சாப்பிட்டால், உடல் உஷ்ணம் குறையும் ஆரம்பத்திலே கண்டறியப்படும் வயிற்று புண்களை சரிய செய்யும் பழைய சோறுடன் 2 சிறிய வெங்காயம் சேர்த்து சாப்பிட்டால், ரத்தத்தில் உள்ள கொழுப்பு கரைந்து, மாரடைப்பு தடுக்கப்படும். பழைய சோற்றில் ஸ்டார்ச் எனப்படும் மாவுப் பொருட்கள் அதிகம் இருப்பதால், உடலுக்கு தேவையான சக்தியை கொடுக்கும் பழைய சோறு சாப்பிட்டால் அதிக தூக்கம் வரும் என்பது உண்மையல்ல.




