முதல்வர் மருந்தகங்களில், வாடிக்கையாளர்கள் கேட்கும் மருந்து, மாத்திரைகள் இல்லை என்றால், அவற்றை வாங்கி கொடுக்க நடவடிக்கை எடுக்குமாறு, அதிகாரிகளை கூட்டுறவு துறை அறிவுறுத்தியுள்ளது. சில மருந்துகள் இங்கு கிடைப்பதில்லை என புகார் எழுந்தது. இந்த நிலையில், மருந்து தயாரிப்பு நிறுவனங்களிடம் இருந்து வாங்கி வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் ஜெனரிக் மருந்துகளை அதிகம் விற்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.




