ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிபாளையத்தில் அமைச்சர் செங்கோட்டையன் பங்கேற்ற ‘ஜனநாயகன்’ திரைப்படத்தின் முதல் நாள் முதல் காட்சி (FDFS) நிகழ்ச்சியின் போது திரையரங்கில் பரபரப்பு ஏற்பட்டது.
திரையரங்கில் ரசிகர்கள் மற்றும் தொண்டர்கள் அதிகளவில் திரண்டதால் கடும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. அப்போது ஏற்பட்ட நெரிசலில் திரையரங்கின் கண்ணாடி உடைந்து, தொண்டர் ஒருவருக்கு காயம் ஏற்பட்டது.
காயமடைந்த அவருக்கு உடனடியாக முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. இருப்பினும், மருத்துவமனைக்குச் செல்ல மறுத்த அவர், திரைப்படத்தின் முதல் காட்சியை பார்ப்பதிலேயே ஆர்வம் காட்டியதாக கூறப்படுகிறது.




