தனது சகோதரிகளின் AI நிர்வாண வீடியோக்களைப் பார்த்த பிறகு இளைஞன் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் ஹரியானாவில் நடந்தது. பரிதாபாத்தை சேர்ந்த ராகுல் பாரதி (19) என்ற இளைஞர் தற்கொலை செய்துகொண்டதையடுத்து அவரது அப்பா காவல்நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். அதில் மகனின் மொபைலை ஹேக் செய்த சிலர், அதில் சகோதரிகளின் நிர்வாண AI வீடியோக்களை அனுப்பி பணம் கேட்டு மிரட்டியதாகவும், அந்த வேதனையில் ராகுல் தற்கொலை செய்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.



