Oplus_16908288
முதலமைச்சர் விஜயை மிரட்டும் வகையில் பொதுக்கூட்டத்தில் பேசியதாக தொடரப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட விளாத்திகுளம் திமுக எம்.எல்.ஏ. மார்கண்டேயனை, எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் இன்று பாளையங்கோட்டை சிறையில் நேரில் சந்தித்தார்.
புகாரின் அடிப்படையில் கடந்த ஜூலை 20-ஆம் தேதி போலீசாரால் கைது செய்யப்பட்ட மார்கண்டேயன் தற்போது நீதிமன்றக் காவலில் பாளையங்கோட்டை மத்திய சிறையில் உள்ளார். இந்த நிலையில், அவரை நேரில் சந்தித்த உதயநிதி ஸ்டாலின், வழக்கின் தற்போதைய நிலை, சிறை வசதிகள் மற்றும் உடல்நிலை குறித்து கேட்டறிந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த சந்திப்பு தமிழக அரசியல் வட்டாரத்தில் கவனம் ஈர்த்துள்ள நிலையில், வழக்கு தொடர்பான அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.




