பீகார் போராட்டம்: மாணவர்கள் மீது ஏ.கே.47 தாக்குதல்? ராகுல் காந்தி குற்றச்சாட்டு..!!

 

 

பீகாரில் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் மீது ஏ.கே.47 துப்பாக்கி ஏந்திய பாதுகாப்புப் படையினர் நடவடிக்கை எடுத்ததாக மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி குற்றம்சாட்டியுள்ளார்.

 

மேலும், போராட்டத்தில் பங்கேற்ற மாணவர்கள் மீது பல்வேறு வழக்குகள் பதிவு செய்யப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். “போராட்டத்தில் ஈடுபடும் மாணவர்கள் மீது எந்த ஒரு எஃப்ஐஆரும் பதிவு செய்யப்படாது என்று பிரதமர் அளித்த வாக்குறுதி என்ன ஆனது?” என்றும் ராகுல் காந்தி கேள்வி எழுப்பியுள்ளார்.

 

இந்த விவகாரம் தொடர்பாக அரசியல் வட்டாரங்களில் பரபரப்பு ஏற்பட்டுள்ள நிலையில், ராகுல் காந்தியின் குற்றச்சாட்டுக்கு மத்திய அரசு அல்லது சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தரப்பில் அதிகாரப்பூர்வ விளக்கம் வெளியாகவில்லை.

Read Previous

சிறையில் உள்ள மார்கண்டேயனை சந்தித்தார் உதயநிதி ஸ்டாலின்… பரபரப்பான அரசியல் நகர்வு..!!

Read Next

தினமும் சிறிதளவு வேப்பம்பூ சாப்பிட்டால்.. உடலுக்கு கிடைக்கும் ஆச்சரிய நன்மைகள்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular