“சிறையில் ரொம்ப சந்தோஷமாக இருக்கிறேன்”.. நீதிமன்றத்தில் ஆஜரான மார்க்கண்டேயன் பேச்சு வைரல்..!!

தமிழக வெற்றிக் கழகத் தலைவர் மற்றும் முதலமைச்சர் விஜய்க்கு எதிராக மிரட்டல் விடுத்ததாக தொடரப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட தி.மு.க. எம்.எல்.ஏ. மார்க்கண்டேயன், நேற்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.

விசாரணை நிறைவடைந்த பிறகு காவல்துறையினர் அவரை மீண்டும் சிறைக்கு அழைத்துச் செல்லும் போது, செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளித்த அவர், “சிறையில் எனக்கு எல்லாமே மிகவும் சௌகரியமாக இருக்கிறது. நான் மிகவும் மகிழ்ச்சியாகத்தான் இருக்கிறேன்” என்று சிரித்தபடியே கூறியதாக வெளியாகியுள்ள வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இந்தக் கருத்து அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளதுடன், சமூக வலைதளங்களிலும் பல்வேறு கருத்துகள் பதிவாகி வருகின்றன.

இந்த விவகாரம் தொடர்பாக ஆதரவாளர்கள் மற்றும் விமர்சகர்கள் மாறுபட்ட கருத்துகளை முன்வைத்து வரும் நிலையில், வீடியோ இணையத்தில் தொடர்ந்து பகிரப்பட்டு வருகிறது.

Read Previous

‘ஜனநாயகன்’ டிக்கெட் சர்ச்சை.. ரூ.200 டிக்கெட்டுக்கு கூடுதலாக ரூ.500 கேட்டு ரசிகர்களுக்கு வாட்ஸ்-அப் மெசேஜ்..!!

Read Next

‘ஜனநாயகன்’ படத்தில் புதிய டைட்டில் கார்டு.. திரையரங்குகளில் ரசிகர்கள் உற்சாக கொண்டாட்டம்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular