‘ஜனநாயகன்’ டிக்கெட் சர்ச்சை.. ரூ.200 டிக்கெட்டுக்கு கூடுதலாக ரூ.500 கேட்டு ரசிகர்களுக்கு வாட்ஸ்-அப் மெசேஜ்..!!

முதல்வர் விஜய் நடித்துள்ள ‘ஜனநாயகன்’ திரைப்படம் உலகம் முழுவதும் இன்று (ஜூலை 23) திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

இந்த நிலையில், தஞ்சையில் உள்ள ஒரு திரையரங்கில் முன்பதிவு செய்த ரசிகர்களுக்கு அனுப்பப்பட்டதாகக் கூறப்படும் வாட்ஸ்-அப் தகவல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதன்படி, ஏற்கனவே ரூ.200-க்கு டிக்கெட் முன்பதிவு செய்த ரசிகர்கள், கூடுதலாக ரூ.500-ஐ QR கோடு மூலம் செலுத்த வேண்டும் என்றும், இதனால் டிக்கெட் கட்டணம் ரூ.700 ஆக உயர்த்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த தகவல் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வரும் நிலையில், ரசிகர்கள் பலரும் தங்களது அதிருப்தியை வெளிப்படுத்தி வருகின்றனர்.

இதுதொடர்பாக சம்பந்தப்பட்ட திரையரங்கு நிர்வாகம் அல்லது அதிகாரிகள் தரப்பில் இதுவரை அதிகாரப்பூர்வ விளக்கம் வெளியாகவில்லை.

Read Previous

ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு.. வீடு தேடி பயோமெட்ரிக் பதிவு செய்யும் அதிகாரிகள்..!!

Read Next

“சிறையில் ரொம்ப சந்தோஷமாக இருக்கிறேன்”.. நீதிமன்றத்தில் ஆஜரான மார்க்கண்டேயன் பேச்சு வைரல்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular