சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே, 10-ம் வகுப்பு மாணவி தேவி ஸ்ரீ (14) உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆரம்பகட்ட தகவலின்படி, செல்போனை அதிகமாக பயன்படுத்தியதாக பெற்றோர் கண்டித்ததுடன், அதை வாங்கி வைத்ததாக கூறப்படுகிறது.
இதனால் மன உளைச்சலுக்கு ஆளான மாணவி, வீட்டிலும் பின்னர் பள்ளியிலும் அதிக அளவில் சத்து மாத்திரைகளை உட்கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது. உடல்நலக்குறைவு ஏற்பட்டதைத் தொடர்ந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்தச் சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.




