வீட்டில் செல்வ செழிப்பு பெருகணுமா?.. இந்த சிலைகளில் ஒன்றை வைத்தாலே போதும்..!!

பொதுவாகவே அனைவருக்கும் வாழ்வில் அதிக பணம் சம்பாதிக்க வேண்டும் எனவும் செல்வ செழிப்புடன் ஆடம்பரமாக வாழவேண்டும் எனவும் ஆசை இருக்கும்.

இருப்பினும் அது அனைவருக்கும் சாதித்தியமாவது கிடையாது. ஆனால், வாஸ்து சாத்திரத்தின் அடிப்படையில் குறிப்பிட்ட சில சிலைகளுக்கு நேர்மறை ஆற்றலை ஈர்க்கும் ஆற்றல் இயற்கையிலேயே இருப்பதாக குறிப்பிடப்படுகின்றது.

அந்த வகையில் வாஸ்து பிரகாரம் வீட்டில் குறிப்பிட்ட சில சிலைகளை வைப்பதால் ஒருபோதும் பணத்தட்டுப்பாடு வராது.

அதுமட்டுமன்றி அவை தீய  சக்திகளை வீட்டில் இருந்து அகற்றி நேர்மறை ஆற்றலை அதிகரிக்கு சக்தியை கொண்டுள்ளது. இப்படி செல்வ செழிப்பையும் அதிர்ஷ்டத்தையும் அள்ளிக்கொடுக்கும் சிலைகள் குறித்து இந்த பதிவில் தெரிந்துக்கொள்ளலாம்.

 

விநாயகர் சிலை

வாஸ்து சாஸ்திரத்தின் அடிப்படையில் விநாயர் சிலையை வீட்டில் வைத்தால் செல்வம் பெருகுவதற்கு தடையாக இருக்கும் அனைத்து தீய ஆற்றல்களும் நீங்கி சுபிட்சம் அதிகரிக்கும்.

 

விநாயகர் சிலை வீட்டில் வைத்திருப்பது நேர்மறையை ஆற்றலை அதிகரிப்பதால், வீட்டில் பணத்துக்கும் ஏனைய செல்வ செழிப்புக்கும் பஞ்சமே இருக்காது.

லட்சுமி தேவியின் சிலை

வாஸ்து மற்றும் இந்து மதத்தின் அடிப்படையில், லட்சுமி தேவியின் சிலையை வீட்டில் அல்லது வியாபாரம் செய்யும் இடத்தில் அவசியம் வைக்க வேண்டும் என்று வலியுறுத்தப்படுகின்றது.

 

காரணம் லட்சுமி தேவி செல்வத்தை வழங்கும் கடவுளாக பார்க்கப்படுகின்றார். லட்சுமியின் ஆசீர்வாதம் இருந்தால் ஒருபோதும் பணத்துக்கு பஞ்சமே இருக்காது.

ஆமை சிலை

சாஸ்திரங்களின் அடிப்படையில் விஷ்ணுவின் இரண்டாவது அவதாரம் கூர்ம அவதாரமாகும். அப்படியென்றால் ஆமை.

 

எனவே ஆமை விஷ்ணு பகவானின் மறு வடிவமாகவே பார்க்கப்படுகின்றது. விஷ்ணு இருக்கும் இடத்தில் நிச்சயம் லட்சுமி தேவியும் இருப்பார் என்பது ஐதீகம். எனவே வீட்டில் ஆமை சிலையை வைத்தால் பணப்பிரச்சினை மற்றும் கடன் தொல்லைகள் நீங்கும்.

யானை சிலை

வாஸ்து சாஸ்திரத்தில் குறிப்பிடப்பிடப்பட்டுள்ளதன் அடிப்படையில்  லட்சுமி தேவியின் அருள் முழுமையாக யானையின் உருவத்திலும் இருப்பதாக நம்பப்படுகின்றது.

 

வீட்டில் பித்தளை அல்லது வெள்ளி யானை சிலையை வைப்பதால் எதிர்மறை ஆற்றல்கள் அனைத்தும் தகர்த்தப்பட்டு, நேர்மறை ஆற்றல் மற்றும் பணத்தை ஈர்க்கும்.

காமதேனு சிலை

இந்து மதத்தில்  காமதேனு சிலைக்கு முக்கிய இடம் கொடுக்கப்படுகின்றது. இதற்கு விருப்பத்தை  நிறைவேற்றும் ஆற்றல் காணப்படுகின்றது.

 

இந்த பசுவின் சிலையை வீட்டில் வைத்தால் செல்வ செழிப்புக்கு குறைவே இருக்காது. விருப்பங்கள் அனைத்தும் நிறைவேற ஆரம்பிக்கும்.

Read Previous

நெஞ்சில் உள்ள சளியை அகற்றி கபத்தைக் குறைக்கும் ஆற்றல் உள்ள நரிப்பயிறு பற்றிய பதிவு..!!

Read Next

உங்கள் வேண்டுதல்கள் உடனே நிறைவேற இந்த வழிபாடு மட்டும் செய்யுங்க போதும்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular