தொழில் நகரமான கோவையில் ஆண்டுக்கு சுமார் 100 டன் தங்க நகைகள் உற்பத்தி செய்யப்படுகின்றன. ஆனால் தங்க விலை தொடர்ந்து உயர்வதால் வாங்குபவர்கள் குறைந்து, நகை வியாபாரம் 70% வரை சரிந்துள்ளது. போதிய ஆர்டர்கள் இல்லாததால் நகைப்பட்டறைகள் வெறிச்சோடி காணப்படுகின்றன. இதன் காரணமாக லட்சக்கணக்கான தொழிலாளர்கள் வேலைவாய்ப்பை இழந்துள்ளனர்.




