Oplus_131072
தன் வினை தன்னைச் சுடும் என்பதை உணர வைத்த பதிவு..!! படித்ததில் மிகவும் பிடித்தது..!!
இந்த மாசம் தாத்தா நம்ம வீட்டுக்கு வரலையாப்பா என்று ஆசையோடு கேட்டான் மகன் அமுதன் அப்பா அழைக்க போகாட்டாலும் உங்க பெரியப்பா தாத்தாவை இங்கே கொண்டு வந்து விற்றுவார் டா கவலைப்படாதே என்று கோபமாய் பதில் சொன்னால் அமுதனின் அம்மா என்னுடைய மனைவி அப்போது என் அலைபேசி மணி ஒலித்தது எடுங்க உங்க அண்ணனாய் தான் இருக்கும் உஷாவின் யூகம் சரிதான் அண்ணன் தான் அழைத்தார். வணக்கம் அண்ணே கோபி தான் பேசுறேன் சொல்லுங்க என்றேன் என்னடா அப்பாவை அழைச்சிட்டு போகலையா என்று என்னுடைய அண்ணன் கேட்டார் அவரை சொல்லியும் குற்றமில்லை அண்ணி தொந்தரவு செய்து இருப்பாள். கொஞ்சம் வேலையா போயிடுச்சு இன்னும் ஒரு மணி நேரத்துல வந்துருவேன் என்று கூறிவிட்டு நான் போனை கட் பண்ணினேன். பிறகு அப்பாவை கூப்பிட செல்ல புறப்பட்டேன் அப்பா எனக்கு ஒரு சந்தேகம் என்று கேட்டால் என்னுடைய மகன் அமுதன் என்னடா சந்தேகம் தாத்தாவுக்கு நீ பெரியப்பானு இரண்டு பிள்ளைகள் தாத்தாவை மாறி மாறி வச்சிக்கிறீங்க உனக்கு நான் ஒரே பிள்ளை உனக்கு வயசாயிட்டா ஒரு மாசம் நான் வச்சிக்குவேன் அடுத்த மாசம் நீ எங்கே போவாய் என்று என் மகன் என்னை கேட்டது யாரோ பிடரியில் ஓங்கி அறைந்தது போல உணர்ந்தேன். கண்டிப்பாக இந்த பதிவை படித்தாலே உங்களுக்கு இந்த பதிவின் கருத்து என்னவென்று புரியும். தன்வினை தன்னைச் சுடும் என்பதை புரிய வைத்த ஒரு அற்புதமான பதிவு.




