தமிழகத்தில் காலியாக இருக்கும் 2,833 காவலர் பணியிடங்களுக்கான அறிவிக்கை சீருடைப் தமிழ்நாடு பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது. அதில், 180 சிறைக் காவலர்கள் மற்றும் 631 தீயணைப்பு வீரர்களும் தகுதியின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக ஆன்லைனில் நாளை ஆகஸ்ட் 22 முதல் செப்டம்பர் 21-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என கூறப்பட்டுள்ளது. மேலும், இதற்கான எழுத்துத் தேர்வு நவம்பர் 9-ந்தேதி நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.




