கேரளாவின் கொல்லத்தில் தயிர் பச்சடிக்காக திருமண வீட்டில் அடிதடி நடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. ரவிபுரம் பினக்கல்லில் உள்ள ராஜதானி ஆடிட்டோரியத்தில் திருமண வரவேற்பின் போது கேட்டரிங் தொழிலாளர்கள் தயிர் பச்சடிக்காக சண்டையிட்டுக்கொண்டனர். விருந்தினர்கள் சாப்பிட்ட பிறகு கடைசியாக கேட்டரிங் தொழிலாளர்கள் சாப்பிடச் சென்றுள்ளனர். அவர்களில் சிலருக்கு தயிர் பச்சடி வைக்கப்பட்டது. சிலர் கிடைக்காததால் வாக்குவாதத்தில் ஈடுபட்டு கைகலப்பாக மாறியது. இரு தரப்பாக பிரிந்த இளைஞர்கள், மாறி மாறி அடித்துக் கொண்டனர்.




