பழங்களில் பல நன்மைகள் இருக்கிறது என்று நமக்கு நன்றாகவே தெரியும். அதனால் அதை தினமும் சாப்பிடும் ஒரு பழக்கம் நமக்கு இருக்கிறது. ஆனால் அப்படி பழங்களை தினமும் சாப்பிடும் போது நாம் செய்யும் தவறுகள் என்னென்னவென்று உங்களுக்கு தெரியுமா. அந்த வகையில் பழங்கள் சாப்பிடும் போது நாம் என்னென்ன தவறுகள் செய்கிறோம் என்பதை இந்த பதிவில் காண்போம்.
பழங்களை தவறாக சாப்பிட்டால் நமக்கு ஊட்டச்சத்துக்கள் கிடைக்காமல் இருப்பதோடு பக்க விளைவுகளும் ஏற்படும். முதலில் இரவு நேரங்களில் பழங்களை சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். ஏனெனில் இரவு நேரத்தில் பழங்களை சாப்பிட்டால் தூக்கமின்மை பிரச்சனை வரும். பழங்களின் தோள்களில் அதிக விட்டமின்கள் உள்ளது. ஆனால் அதை பெரும்பாலானோர் சாப்பிடுவதில்லை. ஆப்பிள் மற்றும் கொய்யா போன்ற பழங்களை தோளோடு சாப்பிட்டால் தான் நமக்கு கிடைக்க வேண்டிய ஊட்டச்சத்து முழுமையாக கிடைக்கும்.
பழங்களில் அதிக அளவு நீர்ச்சத்து இருப்பதால் அதை சாப்பிட்டவுடன் தண்ணீர் குடிக்க கடாது. அப்படி செய்தால் செரிமானத்தில் சமநிலை பாதிக்கப்படும். மேலும் பழங்களை வெட்டியவுடன் குளிர்சாதன பெட்டியில் வைத்து சாப்பிட்டால் நமக்கு பல பிரச்சனைகள் ஏற்படும். ஆகையால் பழங்களை நறுக்கிய உடன் சாப்பிட வேண்டும்.
மேலும் பழங்களை மற்ற உணவுகளோடு சேர்த்து சாப்பிடக்கூடாது. இப்படி செய்வதன் மூலம் செரிமான பிரச்சனை ஏற்படும். அதுமட்டுமில்லாமல் சாட் மசாலா மிளகாய் தூள் போன்றவற்றை பழங்களில் போட்டு சாப்பிடக்கூடாது. அப்படி சாப்பிட்டால் அமிலத்தன்மை ஏற்பட வாய்ப்பு அதிகமாக இருக்கிறது. பழங்கள் சாப்பிடுவது நல்லது தான் ஆனால் அதை சரியான முறையில் சாப்பிட வேண்டும். ஆகையால் மேலுள்ள விவரங்களை படித்து சரியான முறையில் பழங்களை சாப்பிடவும்.




