முதலமைச்சர் விஜயை மிரட்டும் வகையில் பேசியதாக கைது செய்யப்பட்ட திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயனின் ஜாமீன் மனுவை தூத்துக்குடி குற்றவியல் நடுவர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
மேலும், மார்க்கண்டேயனை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி காவல்துறை தாக்கல் செய்த மனுவையும் நீதிமன்றம் நிராகரித்துள்ளது.
இரு மனுக்களையும் விசாரித்த நீதிபதி சுமதி, ஜாமீன் மனு மற்றும் காவல் விசாரணை மனு ஆகிய இரண்டையும் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
இந்த வழக்கு தொடர்பான விசாரணை தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், அடுத்தகட்ட சட்ட நடவடிக்கைகள் குறித்து எதிர்பார்ப்பு நிலவுகிறது.




