திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே, திருமணமாகி 8 ஆண்டுகள் ஆன 32 வயதுடைய ரஞ்சிதா உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த மரணத்தில் சந்தேகம் இருப்பதாகக் கூறிய அவரது உறவினர்கள், உடலை வாங்க மறுத்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கணவர் கந்தசாமி பிரேஸ்லெட் வாங்கித் தருமாறு தொடர்ந்து வற்புறுத்தி, வரதட்சணை தொடர்பாக மன அழுத்தம் ஏற்பட்டதாக உறவினர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து, உயிரிழப்புக்கான காரணம் மற்றும் உறவினர்கள் முன்வைத்த குற்றச்சாட்டுகள் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.




