சென்னை நெற்குன்றம் பல்லவன் நகரில், முந்தைய திமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட டாஸ்மாக் கடையை உடனடியாக மூட வலியுறுத்தி, தற்போதைய தவெக அரசுக்கு எதிராக அதிமுக சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.
திருவள்ளூர் மத்திய மாவட்ட அதிமுக சார்பில், ஜூலை 27-ஆம் தேதி காலை 10 மணிக்கு, நெற்குன்றம் N.T. பட்டேல் சாலை அம்மா உணவகம் அருகே இந்த ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி அறிவித்துள்ளார்.



