புருவத்தில் இருக்கும் முடி உதிராமல் இருக்க என்ன செய்ய வேண்டும் தெரியுமா..??
புருவம் என்பது ஒரு சிலருக்கு முடி அடர்த்தியாக அழகாக இருக்கும். ஒரு சிலருக்கு புருவத்தில் முடி கம்மியா இருக்கும். ஒரு சிலருக்கு புருவத்தில் முடியே இருக்காது. குறிப்பாக பெண்கள் புருவத்தில் முடி இருக்க வேண்டும் அதுவும் அழகான கட்டமைப்புடன் இருக்க வேண்டும் என்றுதான் விரும்புவார்கள். இந்நிலையில் புருவத்தில் இருக்கும் முடி உதிராமல் இருக்க என்ன செய்ய வேண்டும் என்பதை பற்றி இந்த பதிவில் நாம் பார்க்கலாம்.
புருவத்தில் இருக்கும் முடி உதிராமல் இருக்க எட்டு சொட்டு விளக்கெண்ணெய் 10 சொட்டு ஆலிவ் ஆயில் இரண்டையும் சேர்த்து லேசாக சூடாக்கி அதில் இரண்டு துளசி இலையை போட வேண்டும். எண்ணெய் ஆறியதும் எடுத்து வைத்துக்கொண்டு தினம் விரல்களால் தொட்டு புருவம் மற்றும் இமைகளில் தடவி வரவேண்டும் இமை மொழிகள் இவ்வாறு செய்யும்போது கொட்டாது. கொட்டினாலும் இவ்வாறு செய்யும் போது அது சரியாகிவிடும்.



