தமிழக அரசு தேர்தல் காரணமாகவே பொங்கல் பரிசு தொகை ரூ.3,000 அறிவித்துள்ளதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார். ஆளுநர் ஆர்.என். ரவியை இன்று (ஜன.6) சந்தித்த பின் பேட்டியளித்த அவர், அதிமுக ஆட்சியில் ரூ.2,500 வழங்கியபோது ரூ.5,000 வழங்க வேண்டும் என்று கோரிய அன்றைய எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின், தற்போது அதனை செயல்படுத்த தவறிவிட்டதாக குற்றம் சாட்டினார். திமுக ஆட்சியின் இறுதி பொங்கல் பண்டிகை என்பதால், அனைத்து குடும்ப அட்டைகளுக்கும் ரூ.5,000 வழங்க வேண்டும் என்று அவர் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.




