சென்னை: கனமழையால் பாதிக்கப்படும் விவசாயிகளுக்கு ஆதரவாக, திமுக ஆட்சிக்கு எதிராக தவெக தலைவர் விஜய் இன்று (அக்.28) அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், “தொடர் மழையால் நெல்மணிகள் வீணாகி முளைத்ததைப் போல மக்கள் விரோத திமுக ஆட்சிக்கு எதிரானத் தொடர் எதிர்ப்பு முளைத்து வளர்ந்து செழித்து ஆட்சியாளர்களை வீட்டுக்கு அனுப்பப் போவது உறுதி. வெற்று விளம்பரத்திற்காக, திரு. ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு ‘நானும் டெல்டாக்காரன்தான்’ எனப் பெருமைபேசிவருகிறது” என குற்றம்சாட்டியுள்ளார்.




