சுவையான மட்டன் குருமா எப்படி செய்வது என்று இந்த பதிவில் விரிவாக காணலாம்.
மட்டன் குருமா
பொதுவாகவே பெரும்பாலான மக்கள் சைவ உணவை விட அசைவ உணவை தான் அதிகமாக விரும்புகின்றனர்.
அதிலும் ஞாயிற்று கிழமை என்றால் அனைத்து வீடுகளிலும் அசைவம் கட்டாயம் இருக்கின்றது. அசைவ பிரியர்கள் விரும்பி சாப்பிடும் உணவு தான் மட்டன்.
மட்டனை குழம்பாக வைத்து சாப்பிடும் நாம் அதனை சற்று வித்தியாசமான முறையில் குருமாவாக செய்து சாப்பிடலாம். இவை இட்லி தோசைக்கு அசத்தல் சுவையுடன் காணப்படும்.
தேவையான பொருட்கள்
ஊற வைப்பதற்கு
மட்டன் – 1 கிலோ
மஞ்சள் தூள் – 1 டீஸ்பூன்
மிளகாய் தூள் – 2 டீஸ்பூன்
உப்பு – 1 டீஸ்பூன்
மசாலா அரைப்பதற்கு
பொட்டுக்கடலை – 2 டேபிள் ஸ்பூன்
சோம்பு – 1 டீஸ்பூன்
கசகசா – 2 டீஸ்பூன்
முந்திரி – 6
தண்ணீர் – சிறிது
தேங்காய் – 1/4 கப் (பொடியாக நறுக்கியது)
தாளிப்பதற்கு
பிரியாணி இலை – 1
நல்லெண்ணெய் – 50 மில்லி
பட்டை – 2 துண்டு
கிராம்பு – 4
ஏலக்காய் – 2
அன்னாசிப்பூ – 1
மராட்டி மொக்கு – 1
கல்பாசி – சிறிய துண்டு
ஜாவித்ரி – சிறிய துண்டு
பெரிய வெங்காயம் – 3 (பொடியாக நறுக்கியது)
பச்சை மிளகாய் – 5 (கீறியது)
இஞ்சி பூண்டு பேஸ்ட் – 2 டீஸ்பூன்
தக்காளி – 3 (பொடியாக நறுக்கியது)
ஊற வைத்த மட்டன்
உப்பு – சுவைக்கேற்ப
மல்லித் தூள் – 1 டீஸ்பூன்
கறிவேப்பிலை – 1 கொத்து
சுடுநீர் – 1 1/2 கப்
அரைத்த மசாலா
செய்முறை:
முதலில் மட்டனை நன்கு கழுவி அதில் மஞ்சள் தூள், மிளகாய் தூள் மற்றும் உப்பு சேர்த்து நன்கு ஊற வைக்க வேண்டும்.
பின்பு ஒரு பாத்திரத்தில் பொட்டுக்கடலை, சோம்பு, கசகசா, சேர்த்து அதை நன்கு ஊற வைத்து அதனை, மிக்ஸி ஜாரில் போட்டு நன்றாக அரைத்துக் கொள்ளவும்
குக்கரில் சிறிதளவு எண்ணெய் சேர்த்து அதில் பிரியாணி இலை, பட்டை, கிராம்பு, ஏலக்காய், அன்னாசிப்பூ, மராட்டி மொக்கு, கல்பாசி, ஜாதிபத்திரி இவற்றினை சேர்து வறுக்கவும்.
இதனுடன் நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், தொடர்ந்து இஞ்சி பூண்டு விழுது, தக்காளி இவற்றினை சேர்த்து நன்றாக வதக்கவும்.
பின்பு ஊற வைத்த மட்டனையும் சேர்த்து நன்றாக கிளறிவிடவும். மல்லி தூள் மற்றும் கறிவேப்பிலை தேவையான அளவு உப்பு சேர்த்து குக்கரை மூடி வைத்து 4 விசில் போட்டு இறக்கவும்.
இதில் நாம் அரைத்து வைத்த மசாலாவை சேர்த்து பச்சை வாசனை இல்லாமல் நன்றாக கொதிக்கவிட்ட இறக்கினால் சுவையான மட்டகன் குருமா தயார்.




