தாய்வானில் ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த மாணவரை கொலை செய்ய முயன்ற வழக்கில், அவரது முன்னாள் காதலிக்கு நீதிமன்றம் சிறைத்தண்டனை விதித்துள்ளது.
முன்னாள் காதலனுக்கு உணவில் எலி மருந்து கலந்து கொடுத்து கொலை செய்ய முயன்றதாக அவர் மீது குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது.
இந்த வழக்கில் நடைபெற்ற விசாரணையில் குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டதைத் தொடர்ந்து, சம்பந்தப்பட்ட இளம்பெண்ணுக்கு நீதிமன்றம் சிறைத்தண்டனை விதித்து உத்தரவிட்டுள்ளது.
இந்த சம்பவம் தாய்வானில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், நீதிமன்றத்தின் தீர்ப்பு அந்நாட்டில் கவனம் பெற்றுள்ளது.




