ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதத்துடன் தொடர்புடைய நிதி மோசடியில் ஈடுபட்ட 8,000-க்கும் மேற்பட்ட வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டதாக மத்திய புலனாய்வு அமைப்பு அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளது. கடந்த 3 ஆண்டுகளாக நடத்தி வரும் தொடர் சோதனையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும், அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து அதிகாரிகள் விரைவில் அறிவிக்க இருப்பதாக தெரிகிறது.




