வாழை இலை விலை 10 மடங்கு உயர்வு: ஒரு கட்டு ரூ.5,500!

 

 

தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி சந்தைப்பேட்டை மார்க்கெட்டில் வாழை இலை விலை திடீரென பல மடங்கு உயர்ந்துள்ளது.

 

வாழை இலை வரத்து குறைந்துள்ள நிலையில், முகூர்த்த நாட்கள் காரணமாக தேவை அதிகரித்துள்ளதால் விலை உயர்ந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

 

கடந்த மாதம் ரூ.500-க்கு விற்பனை செய்யப்பட்ட ஒரு கட்டு வாழை இலை, தற்போது ரூ.5,500 வரை விற்பனை செய்யப்படுகிறது. சில்லறை விற்பனையில் ஒரு வாழை இலை ரூ.30 வரை விற்கப்படுகிறது.

 

திடீர் விலை உயர்வால் பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

Read Previous

உடல்நிலை பாதித்த பெண்ணை காட்டில் விட்டுச் சென்ற குடும்பத்தினர்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular