வேளாண் பட்ஜெட் நகலை கோயிலுக்கு எடுத்துச் சென்ற விவகாரம்: அமைச்சர் மீது ரகசிய காப்பு மீறல் குற்றச்சாட்டு..!!

 

ஆகஸ்ட் 6-ம் தேதி தாக்கல் செய்யப்பட உள்ள வேளாண் பட்ஜெட் நகலை திருப்பதிக்கு கொண்டு சென்று சாமி தரிசனம் செய்த தமிழக அமைச்சர் வினோத் மீது ரகசிய காப்பு பிரமாண மீறல் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

பட்ஜெட் என்பது மக்களுக்கான அரசியல் சாசன ஆவணம் என்றும், அதனை தனிமனித ஆன்மீக நம்பிக்கைகளுக்காக பயன்படுத்தக் கூடாது என்றும் மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

மேலும், அரசு நடைமுறைகள் மற்றும் மரபுகளை மீறியதாக கூறப்படும் அமைச்சர் மீது முதல்வர் விஜய் நடவடிக்கை எடுப்பாரா என்ற கேள்வி அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

Read Previous

கேரளாவில் கனமழை: 12 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்; 5 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை..!!

Read Next

நடிகை அதிதி சர்மா புகார்.. கணவர் குடும்பத்தினர் மீது போலீஸ் நடவடிக்கை..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular