புதுக்கோட்டை அருகே உள்ள ஒரு கிராமத்தில், தெரு விளக்கு ஸ்விட்ச் போர்டில் கூடு கட்டி முட்டையிட்டிருந்த இந்திய ராபின் பறவையை பாதுகாக்க, கிராம மக்கள் 40 நாட்கள் தெரு விளக்குகளை ஏற்றாமல் இருளிலேயே வாழ்ந்துள்ளனர்.
பறவை குஞ்சு பொறித்த பிறகே விளக்குகள் மீண்டும் இயக்கப்பட்டன. மனிதநேயம் என்பது மனிதர்களுக்கு மட்டுமல்ல, இயற்கைக்கும் உயிரினங்களுக்கும் காட்டப்படும் அன்பில்தான் இருக்கிறது என்பதை இந்த கிராமம் செயலால் நிரூபித்துள்ளது.
உயிர்களை மதித்த இந்த கிராம மக்களின் செயல் பாராட்டுக்குரியதா? உங்கள் கருத்தை பதிவிடுங்கள்!..




