இழந்தது எல்லாம் திரும்பத் தா இறைவா..!! சிந்திக்க வைக்கும் பதிவு..!! படித்ததில் பிடித்தது..!!

இழந்தது எல்லாம் திரும்பத் தா எனக் கேட்டேன்..

இழந்தது எவை என இறைவன் கேட்டான்..

பலவும் இழந்திருக்கிறேன் கணக்கில்லை என்றேன்..

பட்டியல் ஒன்றிட்டுச் சொல்லவா இயலும்?

கால மாற்றத்தில் இளமையை இழந்தேன்..

கோலம் மாறி அழகையும் இழந்தேன்..

வயதாக ஆக உடல் நலம் இழந்தேன்..

எதை என்று சொல்வேன் நான்..

இறைவன் கேட்கையில்?

எதையெல்லாம் இழந்தேனோ

அதையெல்லாம் மீண்டும் தா என்றேன்.

அழகாகச் சிரித்தான் இறைவன்.

”கல்வி கற்றதால் அறியாமையை இழந்தாய்”..

“உழைப்பின் பயனாய் வறுமையை இழந்தாய்”..

“உறவுகள் கிடைத்ததால் தனிமையை இழந்தாய்”..

“நல்ல பண்புகளால் எதிரிகளை இழந்தாய்”..

சொல்ல இன்னும் பல உண்டு இதுபோல..

தரட்டுமா அனைத்தையும் திரும்ப என்றான்..

திகைத்தேன்!

இழப்பின் மறுபக்கம் எதுவென்று உணர்ந்தேன்..

வாழ்க்கையின் ஓட்டத்தில் இழப்பும் பேறு தான்..

இழந்ததை அறிந்தேன் இதயம் தெளிந்தேன்..

இறைவன் மறைந்தான்..

Read Previous

டார்ச்சர் செய்த கணவரை மகனுடன் சேர்ந்து துண்டு துண்டாக வெட்டிய மனைவி..!!

Read Next

முருங்கை இலை பொடி செய்வது எப்படி..?? இந்த பொடி மட்டும் செஞ்சு வச்சுக்கிட்டீங்கன்னா இட்லி தோசைக்கு அருமையான சைடு டிஷ்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular