PAYTM பேமெண்ட்ஸ் வங்கி உரிமத்தை இந்திய ரிசர்வ் வங்கி ரத்து செய்துள்ளது. இதன் மூலம் இனி அந்த செயலி வங்கி சார்ந்த பணப்பரிவர்த்தனையில் ஈடுபடக்கூடாது. வங்கி உரிமம் ரத்து தொடர்பான அறிக்கையை நீதிமன்றத்தில் அந்த நிறுவனம் தாக்கல் செய்ய வேண்டும். பணப்பரிவர்த்தனை, மொபைல் ரீசார்ஜ், டிக்கெட் புக்கிங், ஆன்லைன் வணிகம் உள்ளிட்ட பல்வேறு சேவைகளை இந்தியா முழுவதும் பேடிஎம் வழங்கி வருகிறது. இந்த செயலியை இந்தியாவில் மட்டும் சுமார் 330 மில்லியன் பயனர்கள் பயன்படுத்தி வருவது குறிப்பிடத்தக்கது




