தமிழக சட்டமன்றத் தேர்தல் வாக்கு எண்ணிக்கைக்கு இன்னும் 9 நாட்களே உள்ள நிலையில், சென்னை பட்டினப்பாக்கம் இல்லத்தில் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் கட்சியின் மூத்த நிர்வாகிகளுடன் திடீர் ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனையில் ஆதவ் அர்ஜுனா, செங்கோட்டையன் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் பங்கேற்றனர். தேர்தல் முடிவுகள் மற்றும் அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து இதில் ஆலோசிக்கப்பட்டதாகத் தெரிகிறது.




