நாம் அனைவரும் தினமும் கட்டும் ஒரு வரி தான் சரக்கு மற்றும் சேவை வரி (GST). இது மக்களின் அன்றாட பொருட்கள் மற்றும் சேவைகளுக்குகாக மத்திய அரசும் மாநில அரசும் வசூலிக்கும் மறைமுக வரியாகும். இதை சிலர் ஆதரிக்கின்றனர். பலர் எதிர்த்து வருகின்றனர். இந்த வரி மார்ச், 2017 ஆம் தேதி அன்று நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு ஜூலை 1, 2017 முதல் நடைமுறைப்படுத்தப்பட்டது.
இந்த நிலையில், இந்தியாவின் வரி வசூல் உயர்ந்திருப்பதாக தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அதாவது, “நிதி அமைச்சகம் வெளியிட்ட தகவல் என்னவென்றால் மார்ச் மாதத்தில் மட்டும் GST ரூ.1.96 லட்சம் கோடி என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுமட்டுமில்லாமல், 2025 ஆண்டு பிப்ரவரி மாத GST வசூலுடன் ஒப்பிடுகையில் இது 10% அதிகரித்துள்ளதாக நிதி நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்”. இதனை தொடர்ந்து, இந்த வரி வசூல் அதிகரிப்பு இந்தியாவின் வர்த்தகம் மற்றும் பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்த உதவும் என வருமான வரித்துறை பகுத்தாய்வு தெரிவித்து உள்ளது.




