முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 31 ஆண்டுகள் சிறைத்தண்டனை அனுபவித்து, விடுதலை பெற்ற பேரறிவாளன், தற்போது வக்கீல் தொழிலை மேற்கொண்டுள்ளார். இந்நிலையில், அவரை பார் கவுன்சிலில் இருந்து உடனடியாக நீக்க வேண்டும் என மயிலாடுதுறை தொகுதி காங்கிரஸ் எம்.பி. சுதா, குடியரசுத் தலைவர், பிரதமர், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி, மத்திய சட்டத்துறை அமைச்சர் மற்றும் தமிழக முதலமைச்சர் ஆகியோருக்கு கடிதம் எழுதியுள்ளார்.




