Oplus_131072
சளி-நெஞ்சுசளி-இருமலுக்கு வீட்டு வைத்தியம்.
கற்பூரவள்ளி தழை-5 மீடியம் சைஸ்
துளசி தழை- 6 பெரிய சைஸ்
மிளகு-5
கல்உப்பு-4
உட்கொள்ளும் முறை (பெரியோர்களுக்கான அளவு)
காலை
பல் விளக்கிய பின்,வெறும் வயிற்றில் மேலுள்ள படத்தில் இருப்பது போன்று வைத்து மெல்லவும்.
உமிழ்நீரோடு வரும் சாரை மட்டும் மெதுவாக விழுங்கவும்.
பின்னர் சக்கையை விழுங்கவும்.
மாலை
மதிய உணவு முழுதும் சீரணித்த நிலையில்,தேநீர் மற்றும் பட்சணங்கள் தேடும் நேர்த்தில்.மேற்கூறிய மருந்தை காலையில் சாப்பிட்டதை போல் சாப்பிடவும்.
மு.கு:குடல் சுத்தமாக இருந்தால் உடல்நலக்குறைவு வருவது குறைவு.மேலும் உட்கொள்ளும் மருந்து நன்கு வேலை செய்யும்.அளவு ஒரே மாதிரியாக மூன்று நாட்கள் காலை மாலை என இருவேளை எடுக்க விரைவில் குணமடையும்.




