கிழக்கு ஆசியாவில் கடலுக்கு மத்தியில் இருக்கும் தீவு நகரம் தைவாம். இங்கு, ஒரு நபருக்கு திருமணத்தின்போது 8 நாட்கள் ஊதியத்துடன் விடுமுறை அளிக்க வேண்டும் என்ற சட்டம் உள்ளது. இதனைப் பயன்படுத்திக்கொண்ட வங்கி ஊழியர் ஒருவர், தனக்கு திருமணம் என கூறி, ஒரே பெண்ணை நான்கு முறை திருமணம் செய்து, 32 நாட்கள் தொடர் விடுமுறை எடுத்துள்ளார். அதுவும் சம்பளத்துடன் விடுப்பு எடுத்துள்ளார். இதுபோன்ற சம்பவம் எதிர்காலத்தில் நடைபெறாமல் இருக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.




