மதுரை அருகே பைக் மீது லாரி மோதிய விபத்தில், பேரனை காப்பாற்றிய பாட்டி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். திருப்பரங்குன்றத்தைச் சேர்ந்த பெரியசாமி என்பவர் தனது மனைவி மற்றும் பேரனுடன் பைக்கில் சென்றுள்ளார். அப்போது பின்னால் வந்த லாரி அவர்கள் மீது மோதியது. உடனே சுதாரித்துக் கொண்ட மகேஷ்வரி, பேரனை தூக்கி சாலையோர மண் தரையில் வீசிவிட்டு, அவர் கீழே விழுந்தார். அப்போது அவர் தலையில் லாரி ஏறி இறங்கியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.




