கோயம்புத்தூர்: பொள்ளாச்சியைச் சேர்ந்த சுப்பிரமணியன் (60) மற்றும் அவரது மனைவி கலாவதி (59) ஆகியோர் தங்களது 60ஆம் திருமணத்திற்காக திருக்கடையூருக்கு காரில் சென்று கொண்டிருந்தனர். தஞ்சாவூர் மாவட்டம், திருவிடைமருதூர் அருகே எதிரே வந்த லாரியோடு கார் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில், சுப்பிரமணியன், கலாவதி தம்பதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். காரில் இருந்த மேலும் 3 பேர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.




