வருமான வரித்துறையின் அறிவிப்பின்படி, பான் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கான கடைசி நாள் டிச., 31 ஆகும். பொதுமக்களின் நிதித் தரவுகளை முறைப்படுத்தும் நோக்கில் இந்த இணைப்பு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதுவரை இணைக்காதவர்கள், இன்று ஆயிரம் ரூபாய் தாமதக் கட்டணம் செலுத்தி இணைக்க வேண்டும். தவறினால், பான் எண் செல்லாததாகி, வருமான வரி செலுத்துதல், பணப் பரிமாற்றம், வங்கிச் சேவைகள் பாதிக்கப்படும். வருமான வரி இணையதளத்தில் Quick Links > Link Aadhar Card மூலம் இதைச் செய்யலாம்.




