அமெரிக்கா-ஈரான் இடையே தற்காலிக சண்டை நிறுத்தம் அமலில் உள்ள நிலையிலும் மோதல் நீடிக்கிறது. ஹார்முஸ் நீரிணையை நோக்கி வந்த ஈரானின் 40 ட்ரோன்களை அமெரிக்கா சுட்டு வீழ்த்தியதோடு, அந்நாட்டின் கெஷ்ம் தீவு மற்றும் கோருக்கில் உள்ள தளங்கள் மீது குண்டுவீசித் தாக்குதல் நடத்தியுள்ளது. லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலால் கோபமடைந்த ஈரான், இஸ்ரேல் மீதும் ஏவுகணைகளை ஏவியுள்ளதால் மத்திய கிழக்கில் பதற்றம் உச்சமடைந்துள்ளது.




