நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகளுக்கு பிறகு நடைபெறும் இந்தியா கூட்டணி கட்சிகளின் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்க, தவெக அழைப்பு விடுக்கப்படவில்லை. தற்போது நாடாளுமன்ற உறுப்பினர்களை எம்.பி. கொண்டுள்ள கட்சிகளுக்கு மட்டுமே இந்த முதற்கட்ட கூட்டத்திற்கு அழைப்பு அனுப்பப்பட்டுள்ளதாக காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. எனினும், கூட்டணியின் அடுத்தடுத்த கூட்டங்களில் தவெகவை அழைப்பது குறித்து முறைப்படி ஆலோசித்து முடிவெடுக்கப்படும் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.




