திருச்சி மாவட்டம் துறையூரில் மது போதையில் பைக்கில் இருந்து தவறி விழுந்தவர்களை காப்பாற்ற முயன்ற பெண் காவலரை இளைஞர்கள் கடித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பெண் காவலருக்கு காயம் ஏற்பட்ட நிலையில் அவர் மருத்துவமனையில் சிகிச்சை எடுத்துக் கொண்டார். இது தொடர்பாக அஜித் (30), ஜெகதீஷன் (18) ஆகியோரை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.




