பாகிஸ்தான் கராச்சியில் குல் பிளாசா வணிக வளாகத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் மேலும் 8 உடல்கள் மீட்கப்பட்டதை அடுத்து உயிரிழந்தோர் எண்ணிக்கை 14 ஆக உயர்ந்துள்ளது. மேலும் 60க்கும் மேற்பட்டோர் காணவில்லை என மேயர் முர்தசா வஹாப் தெரிவித்துள்ளார். மேலும், கட்டிடம் பலவீனமடைந்ததால் மீட்புப் பணிகள் சவாலாக உள்ளது என சிந்து மாகாண ஆளுநர் கூறியுள்ளார்.




