சேலம் கொண்டப்பநாயக்கன்பட்டியில், கள்ளக்காதல் தகராறில் மனைவியை கணவன் தவசியப்பன், மகன் கார்த்தி மற்றும் மணிகண்டன் ஆகியோர் சேர்ந்து அரிவாளால் வெட்டி, கழுத்தை அறுத்து கொடூரமாக கொலை செய்துள்ளனர். பின்னர் உடலை எரித்து, மணிகண்டன் வீட்டின் பின்புறம் உள்ள விஜயனுக்கு சொந்தமான நிலத்தில் புதைத்துள்ளனர். இந்த கொலைக்கு ரூ.50 ஆயிரம் பேரம் பேசியதாக கூறப்படுகிறது. தவசியப்பன், கார்த்தி, மணிகண்டன் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். விஜயன், சுரேஷ் ஆகியோரை போலீசார் தேடி வருகின்றனர்.




