திருநெல்வேலி மாவட்டத்தில், பெண் ஒருவர் திருமணமான நபருடன் உறவில் இருந்த நிலையில், அப்பெண் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராதிகா என்ற பெண் அப்பகுதியில் உள்ள நபருடன் தொடர்பில் இருந்துள்ளார். அவருக்கு திருமணமாகியிருந்த நிலையில், ராதிகா அவருடன் நெருக்கமாக பழகி வந்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த ராதிகாவின் சகோதரர் கண்ணன், அப்பெண்ணை அரிவாளால் வெட்டிக் கொலை செய்துள்ளார்.




