கடுக்காய் இந்த கடுக்காயில் ஏராளமான மருத்துவ குணங்கள் உள்ளது. நம் முன்னோர்களின் காலகட்டத்தில் இருந்து ஒரு சில மருத்துவங்களுக்கு வீட்டிலேயே இயற்கையான முறையில் இந்த கடுக்காயை பயன்படுத்துவார்கள். இந்நிலையில் கடுக்காயில் உள்ள மருத்துவ குணங்கள் பற்றி இந்த காலகட்டத்தில் பலருக்கும் தெரியாது. எனவே கடுக்காய் மருத்துவ குணங்கள் பற்றி இந்த பதிவில் நாம் பார்க்கலாம்.
கடுக்காயை பாலில் கரைத்து மிகவும் குறைந்த அளவு தினமும் எடுத்துக் கொண்டால் உடல் வலிமை நன்கு அதிகரிக்கும்.
கடுக்காயை அரைத்து பற்பொடியாக பயன்படுத்தினால் பல் கூச்சம் ஈறு பிரச்சனைகள் போன்றவைகளில் இருந்து நிவாரணம் பெறலாம்.
கடுக்காயுடன் திப்பிலி சேர்த்து தேனில் குழைத்து தினம் இரண்டு முறை சாப்பிட்டு வர நாள்பட்ட இருமலிலிருந்து விடுதலை கிடைக்கும்.
உப்பு தவிர மற்ற அனைத்து சுவைகளும் கடுக்காயில் இருப்பதால் பசியை தூண்டி வாதம், பித்தம் கபம் போன்றவைகளில் இருந்தும் ஆறுதல் தரும்.




